மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்

Kayts_St_Antonys_Collegeஊர்காவற்துறை சென் அந்தனிஸ் கல்லூரியின் அருட்தந்தை ரொபின்சன் ஜோசப் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்தள்ளார். சென் அந்தனிஸ் கல்லூரியில் தங்கிக் கல்வி கற்கும் 50 மாணவர்களை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பொருளாதார ரீதியாகப் பொறுப்பெற்று அதற்கான நிதியுதவியை ஆரம்பித்து உள்ளது.

Kayts_St_Antonys_Collegeஊர்காவற்துறை சென் அன்தனிஸ் கல்லூரியில் 470 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 150 மாணவர்கள் இந்துக்கள். ஏகனயவர்கள் கத்தோலிக்கர். இம்மாணவர்களில் 110 மாணவர்கள் யுத்தத்தினால் அனாதரவானவர்கள். பெரும்பாலும் இந்துக்கள். இவர்களைப் பராமரிக்க அரசு மாதாந்தம் 88 000 ரூபாய்களை வழங்கி வருகின்றது. ஆனால் 110 மாணவர்களது உணவு உடை உறையுள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளுக்கு அரசு வழங்கும் நிதி சில தினங்களுக்கே போதுமானது. நிதிப்பங்களிப்பை அதிகரிக்கும்படி அரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வெளியில் இருந்து நிதி உதவியைக் கோரும் நிலைக்கு அருட்தந்தை நிர்ப்பந்திக்கப்பட்டு லிற்றில் எய்ட் டை அணுகி இருந்தார்.

லிற்றில் எய்ட் ஏற்கனவே மன்னாரில் டிலா பிரதேர்ஸின் பராமரிப்பில் இருந்த 50 மாணவர்களை வோல்தம்ஸ்ரோ பிள்ளையார் ஆலயத்துடன் இணைப்பை ஏற்படுத்தி அவ்வாலயமே தற்போது அந்த மாணவர்களின் பொருளாதாரப் பொறுப்பை மேற்கொண்டு வருகின்றமை அறிந்ததே. இதே போன்றதொரு ஒருங்கிணைப்பை ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரியிலும் லிற்றில் எய்ட் வெற்றிகரமாக சாத்தியமாக்கி உள்ளது.

சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து இரு வேறுபட்ட சமய நிறுவனங்கள் இணைந்து ஒரு பொது நோக்கில் செயற்படுகின்ற வேலைத்திட்டம் அண்மைய காலத்திற்கு முன் சாத்தியமாக இருக்கவில்லை. ஆனால் தற்போது அது சாத்தியமாகி உள்ளது என இந்த உதவி முயற்சிகளை முன்னெடுத்த லிற்றில் எய்ட் அறிவித்துள்ளது.

Kayts_St_Antonys_Collegeதங்களது பாடசாலை பல வருடங்களாக மதசார்பற்ற கல்லூரியாகவே செறப்பட்டு வருவதாகத் தெரிவித்த அருட்தந்தை ரொபின்சன் ஜோசப் இந்து மாணவர்கள் தங்கள் சமய விடயங்களை பின்பற்றுவதற்கு இந்துக்களுக்கான சமய அறை ஒன்று இந்துக் கடவுள்களின் படங்களுடன் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

யூன் 23ல் லிற்றில் எய்ட் அமைப்பு குழு ஒன்று ஊர்காவற்துறைக்குச் விஜயம் ஒன்றை மேற்கொண்டது. இதில் லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன் லிற்றில் எய்ட் இன் இலங்கைப் பிரதிநிதி டொக்டர் நிமால் காரியவாசம் மற்றும் ஆனந்தகுமார் கபில கொரலகே சாகரா ஹெற்றியாராச்சி ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் எழுவை தீவு மற்றும் ஊர்காவற்துறை பொது மருத்துவமனைக்கும் வேறு வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகச் சென்று பார்வையிட்டனர்.

Kayts_St_Antonys_Collegeஇவர்கள் சென் அந்தனிஸ் கல்லூரியின் தலைவர் நவராஜாவையும் சந்தித்து உரையாடினர். நவராஜா கடந்த 15 வருடங்களாக அக்கல்லூரியுடன் தொடர்புபட்டவர். இவர் லிற்றில் எய்ட் குழுவினருடன் கல்லுரியின் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்காலத்திட்டம் குறித்து கலந்தரையாடினர்.

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மேற்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா யாழ்ப்பாணம் பதுளை ஆகிய பகுதிகளில் அனோதரவான அல்லது பெற்றோர்களால் பராமரிக்க முடியாத பிள்ளைகளைப் பொறுப்பேற்று அவர்களைப் பராமரித்து வருகின்றனர். அத்துடன் முதியோர் பராமரிப்பு இலவச கணணிப் பயிற்சிகள் பெண்களுக்கான தையல் பயிற்சிகள் என இவர்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தனது கணக்கு விபரங்களை வெளிப்படையாக வெளியிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Link: http://littleaid.org.uk/st-anthonys-college-kayts-report-on-the-orphanage

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *