வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பாக ஆராய இன்றும் நாளையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு நடைபெறுகின்றது.
வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம். சார்ள்ஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி. ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மீள்குடியேற்றப்ட்ட பகுதிகளின் அபிவிருத்தி மற்றம், வெளிநாட்டு வளங்களை எவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்குவது என்பது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.