போர் குற்ற விசாரணைகளின் போது அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி பயன்படுத்தப்படுவாராம்
சர்வதேச அமைப்புக்களாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பயன்படுத்தப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவத்துள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்பில் தற்போது இருக்கும் கே.பி கடந்தவாரம் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் நிவாரண முகாம்களுக்குச் சென்றதாகவும், இடம்பெயர்ந்த மக்களையும், விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களையும் அவர் சந்தித்ததாகவும், அவர் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்தும், கே.பி தொடர்பாக அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது தொடர்பாகவும் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கே.பி தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்குண்டு, அவர் தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Related News:
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?
கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய