வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட பதில் நீதிவான் எம்.சிற்றம்பலம் முன்னிலையில் நேற்று {20.06.2010) ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.