இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக இன்று பொது மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதால் தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையை வழங்குமாறு தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்ததிறன் மேம்பாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது..
அனைத்து அரச கூட்டுத்தாபனங்கள், நிதியச் சபைகள், மற்றும் தனியார் துறை ஆகியவற்றில் கடமைபுரியூம் சகல ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கை விடுத்துள்ளார்