இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கான ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதிநிதி யசூசி அகாசி 20 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை வருகை தருகிறார்.எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாசி அரச அதிகாரிகள், ஆளும் கட்சி, எதிரணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பார்.
அதேசமயம் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக் குடியேற்றுமாறும் தேசிய நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அகாசி அழைப்பு விடுப்பார் என்று ஜப்பானிய தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் குடியேற்றக் கிராமங்களுக்கு செல்லவுள்ள அகாசி இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.