கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனிகள் ஆய்வுகூடம் மற்றும் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் என்பவை நேற்று திறந்து வைக்கப்பட்டன.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ எம்.பி, உதித லொக்குபண்டார எம்.பி. மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைகள், பாடநூல்கள் போன்ற வற்றையும் நாமல் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் ஆகியோர் வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மேற்படி கல்லூரிக்கு சுமார் 11 கணனிகள் அடங்கிய புதிய ஆய்வுகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.