வடக்கில் பல்வேறு உதவி அ. அ. பிரிவுகளை பி.செ. பிரிவுகளாக்க முடிவு

உள்ளூராட்சிச்சபை எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது வடக்கில் ஊர்காவற்றுறை, காரைநகர், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகப் பிரிவுகளாக மாற்றம் பெறவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி தெரிவித்த அமைச்சர் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள பல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவுகளாகத் தரமுயரும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *