தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமானதும் இடிமின்னல் தாக்கம் குறையும்

lightning.jpgதென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் இடி, மின்னலின் தீவிரத் தன்மை முழுமையாக நீங்கிவிடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி தெரிவித்தார். என்றாலும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக கடந்த இருமாதங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இடைப்பருவப் பெயர்ச்சி மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கம் தீவிரமானதாகக் காணப்படுவது வழமையாகும். அந்த வகையில் கட்நத மார்ச் மாதம் 14ம் திகதி முதல் நேற்று முன்தினம் 25ம் திகதி வரையும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். என்றாலும் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை கால நிலை ஆரம்பமானதும் இடி, மின்னல் தாக்கம் முழுமையாக நீங்கி விடுமென எதிர்பார்க்கின்றோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *