பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை – ஜனாதிபதி

president.jpgபுத்த பெருமானின் பிறப்பு, முக்தி பெறுதல், பரிநிர்வான நிலையை அடைதல் ஆகிய மூன்று முக்கியமான சுப நிகழ்வுகளை குறித்து நிற்கும் வெசாக் பெளர்ணமி தினம் உலகெங்கிலும் வாழும் பெளத்தர்களுக்கு மிக உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இன்றைய தினத்தில் நாம் பெளத்த சம்பிரதாயங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு இத்தினத்தை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கழிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் கூறியுள்ளார். அச்செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.  நாட்டில் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட முப்பது வருடகால பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் இவ் வருட வெசாக் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சாதகமானதும் சுதந்திரமானமான சூழல் ஏற்பட்டுள்ளமை பெளத்தர்களுக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருப்பதற்கு நாம் ஆன்மீக நல்லொழுக்க வழியைப் பின்பற்ற வேண்டும். மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா என்பவற்றுடன் கூடிய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்.

புத்தபெருமானின் போதனைகளுக்கேற்ப சகிப்புத்தன்மையூடாக ஆறுதலைப்பெறும் குறுகியபார்வை இல்லாது தூரநோக்கையும் அர்ப்பணத்தையும் கொண்ட தேசமாக நாம் இருக்க வேண்டும். ‘நிப்பான’ நிலையை அடைவதற்கான எமது பாதையில் கடந்த காலங்களில் தாமதம் தடையாக இருந்திருக்குமானால் அத்தா மதத்தைத் தவிர்க்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோ ச புப்பே பமஜ்ஜித்வா – பச்சா சோ நப்பமஜ்ஜதி
சோ இமங் லோகங் பபாசெதி – அபா முத்தோவ சன்திமா

‘துவக்கத்தில் ஒருவன் தாமதித்தாலும் அதன் பின்னர் அவன் தாமதிக்காவிடின் அவன் மேகத்தினூடே மேலெழுந்துவரும் சந்திரனைப் போல் இவ்வுலகை ஒளிரச் செய்வான்’ -தம்மபதம்

நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் கடந்தகால தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தமாட்டார்கள் ஒரு நல்லொழுக்கமுள்ள தேசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த வெசாக் பண்டிகை தினத்தில் புத்த பெருமானின் வழியை முழுமையாகப் பின்பற்றுவதற்கு உறுதி பூணுவோம்.உங்கள் எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக!

Show More
Leave a Reply to Ajith Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    இது பொய் சொல்லும் வாரம்; எனநினைத்து கொள்ளுங்கள்.

    Reply
  • Ajith
    Ajith

    This is something readers should know:
    Who killed Buddha
    Truth about Asoka and Buddha
    After a period of eight years of being a king, Ashoka planned to seize the territory of Kalinga, the present day Orissa. He led a huge army and fought a gruesome battle with the army of Kalinga. The battle of Kalinga made him pledge to never wage a war again. The battle took place on the Dhauli hills that are located on the banks of River Daya. Though Ashoka emerged victorious at the end, the sight of the battlefield made his heart break with shame, guilt and disgust. It is said that the battle was so furious that the waters of River Daya turned red with the blood of the slain soldiers and civilians.

    The sight of numerous corpses lying strewn across the battlefield made his heart wrench. He felt sick inside. The battle ground looked like a graveyard with bodies of not just soldiers but men, women and children. He saw young children crying over the bodies of their dead parents, women crying over the bodies of their dead husbands, mothers crying over the loss of a child. This made him heartbroken and he made a pledge to never ever fight a battle again. To seek solace, he converted to Buddhism. He was so inspired by the teachings of the Buddhist monks and Buddhist philosophies that he used his status to impart this knowledge all over the world. He is credited to be the first Emperor to make a serious attempt at developing Buddhist policies.

    Reply
  • Rohan
    Rohan

    “இது பொய் சொல்லும் வாரம்; எனநினைத்து கொள்ளுங்கள்.” என்கிறார் பல்லி. பொய் சொல்லாத வாரம் ஒன்றைத் தான் இலங்கை அரசியலில் மக்கள் தேடிக் கொண்டுள்ளனர்.

    அது ஒரு புறம் இருக்க, ஜனாதிபதி சொல்வது உணமை தான் என்று சொல்லும் வாசகர்களும் இருப்பார்கள். யாரும் கேள்வி கேட்டால் புலியும் இப்படித் தானே சொன்னது என்று லொஜிக்கலாகப் பேசி மடக்கி விடுவார்கள்!

    Reply