ஞாயிறு தினங்களிலும் போயா விடுமுறை தினங்களிலும் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்க ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது. இதன்படி இந்த தடை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்யூ தெரிவித்தார்.
ஞாயிறு தினங்களிலும் போயா தினங்களிலும் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக ஊவா முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ பல மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆராய்ந்தார். இதன்படி நேற்று முன்தினம் மாகாண மாதாந்தக் கூட்டத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.