வெள்ள நிவாரணப் பணிகளில் 2000 இராணுவ வீரர்கள் – 8000 உணவுப் பொதிகள் நேற்று பங்கீடு

fo.jpgவெள்ளத் தினால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் பகுதிகளில் இராணுவத்தினர் அயராது நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவ ட்டங்களில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கி வருகின்றனர். கட்டுநாயக்க பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இராணுவத்தினர் நேற்று எண்ணாயிரம் சமைத்த உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்த தாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளத்தில் மிதந்து வரும் கட்டைகள், மரங்கள் மரக் கிளைகள் மற்றும் ஏனைய குப்பைக் கூளங் களை அகற்றும் பணியில் கடற் படையினரும் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *