அமைச்சர்கள் மில்ரோய், றிசாட், முரளி இன்று வவுனியா விஜயம்

மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதிவூதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரை யாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக அவர்களுடைய பழைய இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னமும் எஞ்சியுள்ள மக்களையும் விரைவில் அனுப்பிவைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள சகல திணைக்கள தலைவர்களையும் அமைச்சர்கள் இன்று முதன்முறையாகச் சந்திக்கவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *