கண்டி மாவட்ட ஐ.ம.சு.மு. எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் வன்முறைகளை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிப தியிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப் பித்ததனையடுத்தே ஜனாதிபதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் விசாரணைகளுடன் போட்டியாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *