ஆசியாவின் வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவானது 16ஆவது சார்க் உச்சி மகாநாட்டில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாவ் குயங்கியா “அவதானி” என்ற அந்தஸ்துடன் கலந்துகொண்டிருக்கின்ற போதிலும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சார்க் அமைப்பில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் பிராந்தியத்துக்கு வெளியேயுள்ள நாடொன்று (சீனா) அங்கத்துவம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதிகாரி ஒருவர் ரான் ஒஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.
அத்துடன் சார்க் அமைப்பினை விரிவுபடுத்தும் யோசனை எதுவும்
முன்வைக்கப்படவில்லை என்றும் அத்துடன் புதிய நாடொன்றை உறுப்பினராக சேர்த்துக்கொள்வதாயின் சகல உறுப்பினர்களும் ஏகமனதாக இணங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.