அமைச்சுகளின் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தமது அமைச்சுப் பொறுப்புகளை பொறுப்பேற்கும் வைபவத்தில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது,
அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள போதும் அதற்கான பொறுப்புகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வாரம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளது. இதன்போது அமைச்சர் பெளசிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.