கண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை

keheliya-rambukwella.jpgகண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. குறிப்பாக தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்ற காரணத்தினால் அமைச்சுப் பொறுப்புக்களை தற்போதைக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
 
நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எவருக்கும் அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *