விசேட ரயில், பஸ் சேவை இன்றும் தொடர்கின்றது

train.jpgபண்டி கையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வருவதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றும் விசேட ரயில், பஸ் சேவைகள் நடத்தப்பட்டதோடு இன்றும் (19) மேலதிக சேவைகள் நடத்தப்படுவதாக போக்கவரத்து அமைச்சு நேற்று கூறியது.

பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு வரவும் பிரதான நகரங்களுக்கிடையிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, வவுனியா போன்ற இடங்களில் இருந்து விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *