ஐ.தே.க.வில் மறுசீரமைப்பை வலியுறுத்துகிறார் சஜித் பிரேமதாஸ

unp-logo.jpgபாராளு மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தோல்வி கண்டிருக்கும் நிலையில் ஐ.தே.க.வை மறுசீரமைக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றிருப்பவருமான சஜித் பிரேமதாசாவிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்,விவசாயிகள்,மீனவர்கள் உட்பட தாழ்ந்த மட்டத்திலிருந்து பிரதிநிதித்துவத்தை கட்சி கொண்டிருக்கும வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக பி.பி.சி.க்கு சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐ.தே.க. 46 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆளும்கட்சி 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது.ஆளும் ஐ.ம.சு.மு.வுக்கு தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 143 க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் மத்தியிலேயே அதிகாரம் குவிந்து கிடப்பதால் மறுசீரமைப்பை மேற்கொள்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கட்சியின் தலைவருக்கே அதிகளவு அதிகாரப்பகிர்வு உள்ளது என்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். எதிர்காலத் தேர்தல்களில் கட்சி மேம்பாடடைய மறுசீரமைப்பு முக்கியமானது என்பதே கட்சியின் தலைமைத்துவம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *