சிறுபான் மைச் சமூகங்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதே சிறுபான்மைக் கட்சிகளின் பிரதான கரிசனையாகும். சமத்துவம், நியாயம், நல்லாட்சிக்கான சூழ்நிலை போன்றவற்றை சிறுபான்மைச் சமூகங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.இதேவேளை அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறாரா? என்று கேட்கப்பட்டபோது அதனை அவர் நிராகரித்துள்ளார். ஐ.தே.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்திலுள்ள எவருடனுமோ நான் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. அவர்கள் என்னை அணுகவும் இல்லை. ஐ.தே.க.வுடன் நாம் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் அந்த மாதிரியான நோக்கம் கிடையாது என்று ஹக்கீம் கூறியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தால் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்வீர்களா என்று கேட்கப்பட்டபோது அதனை மறுத்த ஹக்கீம் நாட்டைக் கட்டியெழுப்ப எதிரணியுடன் இணைந்து பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார். “அரசில் இணைவது தொடர்பான இந்தக் கதைகள் அடுத்தவாரம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எனது பிரதிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வழியைக் கொண்டவையாகும். ஐ.தே.க.வாக்காளர்களின் அதிகளவு வாக்குகளை நான் கொண்டுள்ளேன். எனக்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. எதிரணி என்ற முறையில் தேசத்தை மீளக்கட்டியெழுப்ப அரசுடன் பணியாற்றுவோம் என்று ஹக்கீம் தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.