வெற்று வாக்கு பெட்டிகளுக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி

வெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் போது அதன் உட்பகுதியில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு கட்சிகள்/ சுயேச்சைகளுக்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வெற்று வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும் போது, கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேர்தல் முகவர்கள் தாங்கள் விரும்பிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை உட்பகுதியில் ஒட்ட முடியும்.

வாக்குப் பெட்டிகளில் மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளதாக தேர்தல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கூறினார். வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் முகவர்கள் இதனைப் பரிசோதித்து அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *