கொழும் பிலிருந்து மாத்தறைக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் தென்பகுதிக்கான ரயில் பாதையை நவீனமயப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. முதற்கட்டமாக காலியில் இருந்து மாத்தறை வரையான ரயில் பாதை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் மீளமைக்கப்பட உள்ளது.
இதனையொட்டி காலி – மாத்தறையிடையிலான ரயில் சேவைகள் மே மாதம் முதல் ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பு – மாத்தறையிடையிலான ரயில் பாதையை புனரமைப்பது தொடர்பாக இந்திய கம்பனியொன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் கடனுதவி வழங்கியுள்ளது.
இரண்டாம் கட்டமாக காலி – அளுத்கமை, அளுத்கமை – கொழும்பு இடையிலான ரயில் பாதைகள் நவீனமயப் படுத்தப்படும்.
கிருபா
“மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்”
அப்ப யாழ்ப்பாணம் 3 மணிநேரத்தில் வரப்போகுது ?