ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று 16ம் திகதி கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் ஆரம்பமானபோது சரத் பொன்சேகா இன்று முதல் தடவையாக இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நாளையும் இவர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகளும் இன்று இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தனர்
சரத் பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கிருபா
பாவம் ஆசாமி.
மே 17இல் ஏன் வேள்வி முடிந்தது என்று இப்போதுநினைக்கலாம்.
தலைவரை ஏன் அவசரமாய் போட்டு தள்ளினோம் என்றும் நினைக்கலாம்.
ஒன்று மட்டும் தெரிகிறது. ஆட்ச்சில் உள்ள கூட்டம் என்ன விலை குடுத்தேனும் ஆட்சியை தொடர வேண்டும் என்ற வெறியில் உள்ளனர். சரத் என்ன விட்டால், கோத்தாவையும் ஆட்டுவிக்கும்.