இலங்கைக்கு தெற்கே கடலுக்கடியில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்குக்கும், தென் கிழக்குக்கும் இடையிலான திசையில் கொழும்பிலிருந்து 1155 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலுக்கடியில் நேற்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பூகற்பவியலாளர் நில்மினி தல்வெல தெரிவித்தார்.

கடலுக்கடியில் சுமார் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று அதிகாலை 2.03 மணியளவில் 6.00 ரிச்டர் அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அவர் கூறினார். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எதுவிதமான பாதிப்புமே ஏற்படவில்லை.

அதனால் சுனாமி அச்சுறுத்தல் குறித்த முன்னெடுச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஜப்பானின் வடபகுதியில் 6.6 ரிச்டர் அலகிலும், கிழக்கு இந்தோனேசியத் தீவான ‘மலு க்கு’வுக்கு அருகில் 7.00 ரிச்டர் அலகிலும் நேற்று முன்தினம் நிலநடுக்கம் பதிவான தாகவும் பணியகம் அறிவித்திருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *