சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு 16 ஆம் 17 ஆம் திகதிகளில் விசாரணை.

sarath_fonseka-02.jpgஇராணுவச் சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதி மன்றில் நடைபெறவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆம் சரத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் 102 ஆம் சரத்தின்; கீழ் இரு குற்றச்சாட்டுக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ததில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுக்கள் இராணுவச் சட்டத்தின் 109 ஆவது சரத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *