பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • kalaignar
    kalaignar

    தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக் கான தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த தாவது, தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவ தற்குரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. யாழ்.புகையிரத நிலையம், யாழ்.பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள பழைய மேல் நீதிமன்றக் கட்டிடமும் சுற்றுலாப் பயணிக ளுக்கான தங்குமிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் நயினாதீவு செல்லும் சுற்று லாப் பயணிகளுக்காக குறிகாட்டுவானில் குடி தண்ணீர், மலசலகூட வசதி, வாகனத் தரிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் குறிகாட்டுவானில் பயணிக ளின் நலன் கருதி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடற்படையினரும் ஒத் துழைப்பு வழங்குகின்றனர் என யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவித்தார்.

    Reply