இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களில் 46 பேர் விடுதலை ஏனையோரை விடுவிக்க இந்திய அரசுடன் பேச்சு

images.jpgஇந்தியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீன வர்களில் 46 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 140 பேரை விடுவிப்பது தொடர்பில் இந்திய அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் விசாகபட்டிண அதிகாரிகளுடன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஏனையோரை விடுவிப்பது தொடர்பில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டார். இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில் :-

பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2009ம் ஆண்டு மாத்திரம் இலங்கை மீன வர்கள் 700 பேரை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருந்தனர். அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவருடன் மேற் கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து அம் மீனவர்களை கட்டங் கட்டமாக விடுவித்து இலங்கைக்கு அழைத்துவர முடிந்துள்ளது.

இறுதியாக கடந்த 24ம் திகதி 24 பேரும், 27 ம் திகதி 22 பேரும் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விசாகபட்டணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 இலங்கை மீனவர்களை அங்குள்ள நீதிமன்றம் விடு தலை செய்திருக்கிறது. எனினும் அவர்களின் படகை மீட்பதற்கான வழக்கு அடுத்த ஏப்ரல் மாதத்திலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனால் தமது படகையும் மீட்டெத்துக் கொண்டே வருவதற்காக 28 மீனவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் அவசரமாக இலங்கைக்கு வர விரும்பினால் அவர்களை விமான மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக் கைகளை அமைச்சு மேற்கொள்ளும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *