ஆசிரிய மாணவர்கள் வினாப்பத்திரங்களைத் திருடல் – கல்வியியற் கல்லூரிகளின் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

teacher.jpgதேசிய கல்வியியற் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு பயிற்சிப் பெற்று வெளியேறியவர்களுக்கு நேற்று முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம் பெறவிருந்த இறுதிப்பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 17 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நேற்று முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை எழுத்துப்பரீட்சையும் 6 ஆம் திகதி ஏழாம் திகதிகளில் செயன்முறைப்பரீட்சைகளும் நடைபெறவிருந்தன. இந்நிலையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கேற்ப மேற்படி பரீட்சைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

பண்டாரவளை கல்வியியற் கல்லூரியிலிருந்த வினாத்தாள் பொதிகளிலிருந்து ஒவ்வொரு வினாத்தாள்கள் இனந்தெரியாதோரால் எடுக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இவ்வாறு பரீட்சை பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது விடயமாக 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *