கெரவலபிட்டிய அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இறுதிக் கட்டம் பூரணப்படுத்த ப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எதிசக்தி அமைச்சின் ஆலோசனையின் பேரில் 300 மெகாவாட் மின் உற் பத்தி திறன் கொண்ட கெரவல பிட்டிய அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்டமாக 200 மெகா வொட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட பிரிவு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
அதனையடுத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கட்டம் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ளது.