சீகிரிய செல்வோர் பாதுகாப்பு கவசங்களை அணிவது கட்டாயம்!

பிரபல சுற்றுதாத் தலமான சீகிரிய குன்றுகளை பார்வையிடச் செல்லும் சகல சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுää வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் குளவி தாக்குலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து நேற்று முதல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிங்கப்பாதப் பகுதியிலிருந்து மாளிகை பிரதேசம் வரையிலான பகுதியில் சுற்றுப் பயணிகள் கட்டாயமாக பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்ததுடன் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *