கண்டி உதவி இந்தியத் தூதரகத்தால் நடத்தப்படும் ஹிந்தி மொழி வகுப்புகள் இம் மாதம் 22ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கண்டி இந்திய உதவி தூதரகம் விடுத்துள்ள ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010-2011ம் ஆண்டிற்கான ஹிந்தி மொழி பாடநெறி வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 8ம் திகதி முதல் கண்டி உதவி இந்திய தூதரகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக வருவோர் காலை 9.00 மணி முதல் 4.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பாடநெறியினை கண்டி மற்றும் அருகில் வசிப்பவர்கள் மட்டும் மேற்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு 081-2222652 அல்லது 2223786 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது