ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றும் செய்ய முடியா நிலை ஏற்பட்டதனால், மக்கள் விடுதலை முன்னணி உட்பட சகல எதிரணிக் கட்சிகளும் தேர்தல் முடிவுகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்ää
ஜனாதிபதித் தேர்தல் முறையாகää அமைதியாக நடைபெற்றதாக எதிக்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார். தேர்தல் முடிவுகளில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல் ஆiணாயளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் தேர்தல் சமயத்தில் எதிரணியினர் எமது அரசியல் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டனர். எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை. பழிவாங்கும் அரசியல் கொள்கையுடையவராகவே அவர் காணப்பட்டார் என்றும் அமைச்சர் கூறினார்