ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் 19 இல் (19/11/2010) ஆரம்பமாகின்றது என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டதாக ஜனாதிபதியின் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இந்த விடயம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறிப்பை உயர்நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் அடங்கிய குழாம் நேற்று திங்கட்கிழமை ஆராய்ந்தது.
தனது இரண்டாவது பதவிக்காலம் எப்போது ஆரம்பமாகின்றது என்பது தொடர்பாக அரசியலமைப்பின் 129 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை கோரியிருந்தார். பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, நீதியரசர்கள் சிரானி ஏ.பண்டாரநாயக்கா, ஜகத் பால பட்டபெந்தி, கே.ஸ்ரீபவன், பி.ஏ.இரட்நாயக்கா, சந்திரஏக்கநாயக்கா, எஸ்.ஐ.இமாம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவே இந்த விடயத்தை ஆராய்ந்தது.
2010 நவம்பர் 19 இல் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பமாக வேண்டுமென சட்டமா அதிபர் மொகான்பீரிஸ், பிரதி சொலி சிற்றர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய, சிரேஷ்ட அரச சட்டத்தரணி றெரின் புள்ளே, ஓ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இடையீட்டு மனுதாரர் மென்டிஸ் ரோகனதீர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டி.எஸ்.விஜேசிங்கவும் மற்றொரு இடையீட்டு மனுதாரர் சரத்கோங்காகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால்கயமானேயும் ஆஜராகியிருந்ததுடன், ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 19 நவம்பர் 2011 இல் ஆரம்பிக்கப்படவேண்டுமென தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி மேலும் 6 ஆண்டுகளுக்கே மக்கள் ஆணையை நாடியிருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். முதலாவது பதவிக்காலமான 6 வருடங்களுக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர். அதனை சுருக்கவோ துண்டாவோ முடியாதென அவர்கள் தெரிவித்திருந்தனர்.
jo
நவம்பரில் ஆரம்பமாகும் இரண்டாவது காலத்துக்கு இப்போதே மணியடித்தாகி விட்டது. ஜனநாயகம் மகிந்தநாயகமாகி விட்டது. பாவம் மக்கள்.