நாட்டை கட்டியெழுப்ப தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் – முன்னாள் எம்.பி. சுஹைர்

suha.jpgநாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் அழைப்பை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யான எம். எம். சுஹைர் தெரித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.  இது நல்லதொரு சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஜனாதிபதியுடனும், ஆளும் கட்சியுடனும் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியம்.

வெகுவிரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவி ருக்கின்றது. அந்தத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியே அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக வும் ஸ்திரத்தன்மைக்காகவும், முஸ்லிம்கள் அரசுடன் இணைந்து செயற்படுவது அவசியம். முஸ்லிம்கள் எதிர்க்கட்சி சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கு பல தேவைகளும், பிரச்சினைகளும் உள்ளன. ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் போதே அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த தேர்தலில் ஸ்ரீல. மு. கா. முஸ்லிம்களை பிழையாக வழி நடாத்தி விட்டது. இனிமேலும் முஸ்லிம்கள் ஸ்ரீல. மு கா.வின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடாது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *