கனடியத் தமிழ் காங்கிரஸை ஆட்டுவிக்கும் யாழ் மையவாதம் : தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்

David_Poopalapillaiகனடியத் தமிழர்கள் மத்தியில் அறியப்பட்ட டேவிட் பூபாளபிள்ளையை கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து நிறுத்த இப்போது ஒரு பிரிவு முயல்வாதாகவும் அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுக்களில் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் இயக்குனர் சபையுடன் மேற்படி பிரிவு ஈடுபட்டு ள்ளதாகவும் தெரியவருகின்றது. இதற்கான காரணம் யாதெனில் டேவிட் பூபாளபிள்ளையே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் கனடியத் தமிழ்க் காங்கிரஸைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நேரு குணரத்தினத்தின் துணைவரான சேந்தன் நடராஜாவும் இன்னும் சில அவர்களது சகாக்களும் டேவிட் பூபாளபிள்ளையை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

இது பற்றித் அறியவருவதாவது வட்டுக்கோட்டை வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் தருமாறு நேரு குணரத்தினம் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரான டாக்டர் சிறீரஞ்சனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் டாக்டர் சிறீரஞ்சன் இயக்குனர் சபையுடன் கதைத்துவிட்டு இதற்கு தாங்கள் உடன்பட முடியாது என்று தெரிவித்தார். மேற்படி முடிவானது டேவிட் பூபாளப்பிள்ளையினது முடிவ மட்டுமல்ல. அது காங்கிரஸின் இயக்குனர் சபையால் எடுக்கப்பட்ட முடிவு. அந்த இயக்குநர் சபையில் டேவிட் பூபாளபிள்ளை ஒரு அங்கத்துவர் இல்லை.

கனடியத் தமிழ் காங்கிரஸை பின்னின்று இயக்கும் நேரு குணரத்தினத்தின் இந்த முடிவுக்குக் காரணம் மட்டக்களப்பைச் சேர்ந்த டேவிட் பூபாளபிள்ளை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எதிரானவர் என்பதல்ல. இது ஒரு பிரதேச வாதமே தவிர வேறொன்றுமில்லை. டேவிட் பூபாளப்பிள்ளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர். அவருடன் சிறையில் இருந்த பலரும் இன்று மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். அவர்கள் டேவிட் பூபாளப்பிள்ளையை அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவரை நிறுத்தினால் மட்டுமே தமிழ் காங்கிரஸை இயக்க முடியும் என நேரு குணரத்தினம் அழுத்தம் கொடுப்பதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் பூபாளப்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதற்கும் மேலாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்து வந்தவர். 2003 மார்ச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தனக்கிருந்த விமர்சனங்களை வெளிப்படுத்தியும் இருந்தார். இவ்வாண்டு நடுப்பகுதிவரை இடம்பெற்ற யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார் டேவிட் பூபாளப்பிள்ளை.

ஏற்கனவே மேலோங்கி இருந்த யாழ் மையவாதம் கருணாவின் பிளவிற்குப்பின் பிரதேசவாதத்தைக் கக்கியது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மட்டக்களப்பு மக்களையும் போராளிகளையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்த யாழ் மையவாதம் அவர்கள் தங்கள் கருத்துடன் முரண்பட்டால் அல்லது விமர்சனங்களை முன்வைத்தால் உடனடியாக அவர்களுக்கு துரோகிப்பட்டம் சூட்டத் தயங்குவதில்லை. இது டேவிட் பூபாளப்பிள்ளைக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவமும் அல்ல.
 
நேரு குணரத்தினம் புலம்பெயர்ந்த யாழ் மையவாதத்தின் ஒரு எச்சம். உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்ட போது நேரு குணரத்தினத்தை காண முடியவில்லை. நேரு குணரத்தினத்திற்கு உள்ள ஒரே தகுதி வீரகத்தி மணிவண்ணன் எனப்படும் புலிகளின் வெளிநாட்டுப்பிரிவு கஸ்ரோவுடன் ஒன்பதாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர் என்பது மட்டுமே. 1981ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு தனது தந்தையுடன் சென்ற நேரு குணரத்தினம் 1983ல் சென்னை லயோலாக் கல்லூரியில் 2 வருடங்கள் படித்தார். 1986ல் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவர்.

எனக்கு திரு. நக்கீரன் தங்கவேலு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் தாங்கள் வைத்திருந்த கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பே 1998ல் அரசியல் காரணங்களிற்காக தமிழ்க் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பபட்டதாக எனக்குத் தெரிவித்திருந்தார்.

ஆனால் நான் இதனைத் தீர விசாரித்ததில் மேற்படி கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பில் தர்மலிங்கம் மாஸ்ரர், தங்கவேலு ஐயா போன்றோர் பொறுப்பாக இருந்த காலத்தில் அதன் நிகழ்ச்சிகளிற்காக நேருவிடம் கொடுக்கப்பட்ட நிதிக்கான கணக்கு வழக்கு கொடுக்கப்படாததே அதை நிறுத்தியதற்குக் காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே தெரிவித்தார்கள்.

மேற்படி அமைப்பினhல் பெரியளவில் நடத்தப்பட்ட 1998 இராப்போசன விருந்து நடத்துவதற்காக 50,000 முற்பணமாக நேருவால் பெறப்பட்டதாகவும், அந்த விருந்திற்கு 65 டொலர்கள் பிரகாரம் 700 மேற்பட்ட டிக்கட் விற்கப்பட்டு மண்டபம் நிறைந்த விருந்தாக இது நடந்ததாகவும் அத்தோடு விளம்பரத்தாரர்களிடம் இருந்து பணம் பெற்றப்பட்டதாகவும் ஆனால் முற்பணமாக வேண்டப்பட்ட பணமோ அல்லது அந்த விருந்திற்காக செய்யப்பட்ட கணக்கு வழக்கோ 2003ம் ஆண்டு வரை நேரு தரவில்லையென்று அப்போதைய நிதிப்பொறுப்பாளர் தெரிவித்தார்.

அதேபோல இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கென 36,000 டொலர்கள் பெறப்பட்டதாகவும் இந்த மாநாட்டிற்கென பெறப்பட்ட நிதிக் கணக்குகளையோ அல்லது விளம்பர அனுசரணைகளையோ 2003ம் ஆண்டு வரை சமர்ப்பிக்கவில்லையென்றும், வொண்டர் லாண்டில் இடம்பெற்ற தமிழர் நாள் நிகழ்வுகளிற்கு வாங்கப்பட்ட முற்பணம் ஏதும் திருப்பித் தரப்படவில்லையென்றும் இதுவே அந்த கனடியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பைக் கலைத்து கனடியத் தமிழ்க் காங்கிரஸை உருவாக்க உண்மையான காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

கணக்குக் கேட்டு நெருக்கடி கொடுத்த கணக்காளரும் நிதிப்பொறுப்பாளரும் கஸ்ரோவால் அவரது வெளிநாட்டுப் பொறுப்பாளர்களாலும் நிறுத்தப்பட நேரு தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே அவர்கள் கூறினார்கள். இதனை நிரூபிப்பதற்கு நிதிப்பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தங்காள் தயாரென்கிறார்கள். இல்லையென்பதற்கு நக்கீரன் ஐயா போன்றோர் தயாரா?

நேரு குணரத்தினம் போன்றவர்களிள் புற அழுத்தங்களுக்கு கனடியத் தமிழ் காங்கிரஸ் பணிந்து டேவிட் பூபாளப்பிள்ளையை வெளியேற்றினால் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் பிரதேசவாதத்தை ஆதரிக்கும் வடக்கு கிழக்குத் தமிழர்களைப் பிரித்தாழ முயற்சிக்கும் ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு எம் போன்றவர்களின் உறுப்புரிமையை இழக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • kali
    kali

    ஊர் பேரில்லாதவரின் தகவல்; முன்னோட்டம் இட்டவர் தனது பெயரை ஏன் குறிப்பிடவில்லை?

    Reply
  • thurai
    thurai

    இனப் பிரச்சினையை சாட்டாக வைத்து பணப் பிரச்சினை தீர்க்க வந்த நாங்கள் எப்படி இனப்பிரச்சினை பற்ரி வாழ்நாள் பூராவும்பேசுவது? ஒவ்வொருவரின் சுய ரூபங்கள் மெல்ல மெல்ல வெளிவரும்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்த நேரு குணரத்தினம், தங்கவேலு ஆகியோர் எப்போதும் “புலி” .”ஈழம்” என்று தொடங்கும் எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து தங்கள் முகரைகளைக் காட்டுபவர்கள். உலகத்தமிழர் இயக்கத்தில் இந்த இரண்டு பேரும் “பெரும்” புள்ளிகளாக இருந்தவர்கள். இவர்கள் இதுவரை என்ன தொழில் செய்தார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. கனடிய அரசின் பண உதவியோடு இயங்கிய “கனடா தமிழீழச் சங்கத்தில்” இந்த இருவரும் பெரும் புள்ளிகளாக இருந்து மில்லியன் கணக்கில் மோசடி செய்தவர்கள்.

    சுரேஷ் மாணிக்கவாசகன் என்ற புலிக் கேடி தலைமையில் உலகத்தமிழர் இயக்கம் இருந்த காலத்தில் தங்கவேலு அதன் உதவித் தலைவர். அப்போது தமிழீழச் சங்கம் சித்தா சித்தம்பலம் தலைமையில் இயங்கியது. ஆனால் “பண” விவகாரங்கள் யாவும் சுரேஷ் மாணிக்கவாசகனால் கட்டுப்படுத்தப்பட்டது. இவருக்கு நிரந்தரமாக ஒரு படுக்கையறையே தமிழீழச் சங்கத்தில் இருந்தது. மாணிக்கவாசகனை கனடிய போலீசார் கைது செய்தபோது பட்டப்பகலில் இந்த சுரேஷ் மாணிக்க வாசகன் இரண்டு திருமணமான பெண்களுடன் சல்லாபத்தில் இருந்தான். தங்கவேலுவை “மாமா” என்று பலரும் அழைப்பார்கள்.

    சுரேஷ் மாணிக்கவாசகன் தனது “காதலிகளுக்கு” தாராளமாக” பணம் அள்ளி வீசினார். இதனால் மற்ற கோஷ்டிகள், இன்பநாயகம் போன்றோர் “முதலுக்கே மோசம்” என்று சுரேஷ் மாணிக்க வாசகனை பொலிசாரிடம் மாட்டி துரத்தினர். இன்றும் இந்த மாணிக்க வாசகன் இன்னொருத்தர் பெண்டாட்டியுடன்தான் சீவிக்கிறார். இவரின் “திருவிளையாடளினால்” ஒன்பது குடும்பங்கள் பிரிந்தன. டி.பி.எஸ். ஜெயராஜுக்கு கால் ஒன்று உடைக்கப்பட்டது.

    இவை யாவும் “தமிழ் ஈழம்” என்ற கோஷ்டியினால் நடத்தப்பட்ட திருவிளையாடல்கள். கடைசியில் தமிழீழச்சங்கத்தை “வங்க்ரோத்து” அடித்து மூடியும் விட்டார்கள். இப்போதும் தொடரும் “யுத்தம்” தமிழர்களிடம் பணம் பறிக்கும் உரிமை யாருக்கேன்பதே ஆகும்.

    தவிர இந்த “சங்ககங்களில்” உறுப்பினராக சேர “தமிழன்” என்ற தகுதி மாத்திரம் போதாது. யாரவது “புலி” என்று வேஷம் கட்டியவர்கள் சிபார்சு செய்ய வேண்டும். இந்த கும்பல்களின் மோசடிகளை எதிர்த்து கனக மனோகரன், பொன்னுச்சாமி, சிவானந்தன், பற்றும் பலர் தமிழ் ஈழச்சங்க வாசலில் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருவர் அவர்களைப் “படம்” எடுத்து “வன்னிக்கு” அனுப்புவதாக ஒரு “பாவ்லா” காட்டினார். அந்த ஆள் இப்போது தெருவில் அலைகிறார். அதற்கு பொன்னுச்சாமியும், சிவானந்தனும் “நல்ல படமாக எடு” என்று போஸ் கொடுத்து சிரித்தது இன்றும் நினைவில் உள்ளது.

    இந்த தங்கவேலு பின்னர் கத்தோலிக்கர்களோடு சேர்ந்து பொன்னுச்சாமி தலைவராக இருந்த “கனடா கந்தசாமி கோவிலை” பிடுங்கி கத்தோலிக்கர்களிடம் கொடுக்க பெரும் பாடுபட்ட ஆசாமி. இன்று கனடா கந்தசாமி கோவில் கத்தோலிக்கர்களினால் ஆளப்படுகிறது. உண்டியல் பணம் கத்தொலிக்கனான ரெஜி என்பவரின் “ரெஜினோல்ட் பிட்சா ” கடைக்கு முதலாகியுள்ளது.

    இந்த கத்தோலிக்க கும்பல் ஒருமுறை கனடா கந்தசாமி கோவிலுள் புகுந்து “இந்து” குழந்தைகளுக்கு ஏடு தொடக்கல் செய்ய முயன்றார்கள். இதற்கு இந்த “தமிழ் பண்பாடு” பற்றி கதைக்கும் தங்கவேலு பூரண ஆதரவு என்பது இன்னொரு தகவல். ஆட்டுக்குட்டி பாதிரி என்ற பிரான்சீஸ் சேவியரும், பாதிரி சந்திரகாந்தனும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. “புலி” என்றும் “தமிழ்” என்றும் கத்தோலிக்கர்கள் “இந்துக்களின்” பாரம்பரியங்களை அழிப்பதில் முன்னிட்கின்றனர். புலிகளோடு சேர்ந்து கத்தோலிக்க கோஷ்டிகள் இலங்கையில் தங்கள் மத மாற்ற விளையாட்டுக்களை தாராளமாகச் செய்தனர். இதனை கண்டித்து “மாடு தின்னி பாதிரிகள் ஏடு தொடக்கல்” என்று ஒரு பிரசுரம் வெளிவந்தது.

    வத்திக்கானின் ஆணைப்படி “இந்து”க்களின் வழக்கங்களை கைப்பற்றி “கல்வியை” கத்தொலிக்கந்தான் தமிழருக்கு கொடுத்தான் என்று பின்நாளில் சொல்ல இந்நாளில் செய்த முயற்சியே இந்த ஏடு தொடக்கல் விளையாட்டு. அதே தினத்தில் கேரளாவிலும் இந்த முயற்சி நடந்தது. கேரளா இந்துக்கள் கத்தோலிக்கர்களை அடித்து துரத்தினார்கள். இந்த கத்தோலிக்கர்கள் தமிழ் என்று புகுந்து வத்திக்கானிலுள்ள நாசி போப்பின் கொள்கைகளை அமுல் படுத்தி தமிழர்களை மத மாற்றம் செய்ய அலைகிறார்கள். வெகு விரைவில் இந்த கத்தோலிக்கர்கள் திருவள்ளுவரும், கம்பரும் கான்வென்ட்டில் படித்துத்தான் திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் எழுதினார்கள் என்றும் கதை விடுவார்கள்.

    அடுத்தது இந்த பூபாலபிள்ளை விவகாரம். இவர் ஒரு ஆள் கடத்தி. சுரேஷ் மாணிக்கவாசகனின் உறவுக்காரன் என்றும் தகவல். இவருடைய காங்கிரசில் யாரும் எளிதாக அங்கத்துவம் பெற முடியாது. ஆனால் இவர் கனடிய தமிழர்களை தன்னுடைய “காங்கிரஸ்” தான் பிரதிநிதுத்துவம் செய்கிறது என்று கூறி கனடிய அரசிடம் “நிதி” பெற்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு மட்டரகமான ஆசாமியே தவிர வேறொன்றுமில்லை.

    கட்டுரையில் குறிப்பிட்டது போல ஸ்ரீ ரஞ்சன் “வாக்கெடுப்புக்கு” எதிர் என்று எந்த சான்றும் கிடையாது. ஏனென்றால் கடல் கடந்த அரசு என்று உருத்திரகுமாரனால் சொல்லப்பட்டு அமைக்கப்பட்ட கனடிய கமிட்டியில் ஸ்ரீ ரஞ்சனும் ஒரு அங்கத்தவர். 29 பேரைக் கொண்ட அந்த குழுவில் தங்கவேலு உட்பட பல முன்னாள் “புலி” கேடிகளும் உள்ளனர். “தண்ணீரில்” கார் ஓட்ட ஆராச்சி செய்கிறேன் என்றும் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் சுருட்டி தலை மறைவான ராம் சிவலிங்கமும் இந்த குழுவில் ஒரு அங்கத்தவர்.

    இந்த குழுவில் அங்கம் பெறாத நேரு குணரத்தினம், பூபாலபிள்ளை , திருச்செல்வம் போன்றோர் இப்போது புதிய குழுவொன்றை அமைத்து தமிழர்களிடம் மீண்டும் “நாங்கள்தான்” புலிகளின் உண்மையான வாரிசுகள் என்று உண்டியல் குலுக்க அலைகிறார்கள்.

    Reply
  • Naane
    Naane

    இதில இருக்கின்ற ஒருவராவது நாட்டுக்காக போராடியிருந்தால் எவ்வளவோ செய்திருக்க முடியும். இவர்களை கோவித்து பிரயோசனம் இல்லை எல்லாம் இங்கிருக்கும் புலன் பெயர்ந்த கூட்டங்களால் வந்தது. இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் திருகு தாளங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தேனீயில் வரவேண்டியதை யாரோ தேசத்துக்கு அனுப்பிவிட்டார்கள் போல் இருக்கிறது. தேசம் தள்ப்பொறுப்பாளரும் ஏன், ஏது எனக்கேட்காமல் அனுமதித்து விட்டாரா? புனைபெயரில் எழுதுபவர்கூட தேசத்தில் தன்னை ‘அடையாளம்’ காட்டிய பின்னரே அனுமதிக்கப்படுவார் என சொல்லும் தேசம் ஊர் பெயர் போடாத ஒருவரின் இடுகை அதற்கு இன்னொருவர் ‘மாட்டைக்கொண்டு போய் மரத்தில் கட்டும்’ பின்னூட்டம். கதோலிக்கஆசாமி, …பின்னூட்டம் எந்த ‘மையவாத’ தாக்கம்? வாழ்க தேசம்நெற்!

    Reply
  • தேசம்நெற்
    தேசம்நெற்

    மேலுள்ள கட்டுரையை எழுதியவர் தன்னை தேசநிர்வாகத்தினருக்கு அறியப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தனது பெயரை வெளிக்காட்ட விரும்பவில்லை.

    தேசம்நெற்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சில பிழைப்பவாதிகள் செய்யும் திருகுதாளங்களையெல்லாம், யாழ் மையவாதமாக எப்படி இனம் காண முடியும்?? பொதுவாகவே புலிகளோ அல்லது புலிகளை வைத்துப் பிழைப்பு நடாத்துவோர்களோ இன்றும் தொடரும் பிழைப்பு வாதங்கள் அடுத்தவர்கள் தலையில் பழி போட்டு தம்மைக் காப்பாற்ற முயல்வதே…..

    Reply
  • Robert
    Robert

    Taraki Sivaram’s power base in PLOTE was none other than his special friendship with Uma Maheswaran. David Poopalapillai is a brother in law of Taraki Sivaram. In other words David poopalapillai’s power base was his relationship with Sivaram. Now Taraki and LTTE are no more. therefore it is a well expected action in LTTE inspired LTTE style movements.

    Reply
  • rag
    rag

    இன்றும் புலிகளால் உயிர் சேதம் ஏற்படுத்தப்படும். புலம் பெயர்வில் இதற்கு பல ஆதாரங்கள் உண்டு. வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவளிக்காத ஊடகங்கள் வாத்த்க நிறுவனங்களுக்கு எதிராக செயல்படும்படி நேரு வானொலியில் முழங்கியதை நானும் கேட்டேன். நேருவின் பிரதேச வாதத்தை விட நந்தாவின் மத துவேசம் மிக அதிகம்.

    Reply
  • palli
    palli

    எடுத்ததுக்கெல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனைமாதிரி வடகிழக்கை சொல்வது அரசியல் நாகரிகமல்ல; போற போக்கை பார்த்த்கால் இருமல் சிறிது அதிகமானால் கூட இது யாழ்மேலாதிக்க நோயென சொல்வார்கள் போல் இருக்கு; எதையும் அளவுடன் சொன்னால் அது கருத்து; அதையே இரவு பகலாய் சொன்னால் இது கடுப்புபென ஆகி விடும்; உன்மையான பிரச்சனைகள் கூட சிலவெளை இந்த சினப்பால் மறைந்துவிடும் என்பதை சிந்தியுங்கள்;

    Reply
  • NANTHA
    NANTHA

    RAG:
    என்னுடைய பதிலில் எந்த மத துவேஷத்தைக் கண்டீர்கள் என்பது புரியவில்லை. தைப்பொங்கல், தைப்பூசம் என்பன “இந்துக்களுக்குப்” புனிதமான நாட்களாகும். அந்த நாளில் “கத்தோலிக்க” பாதிரிகள் இந்து குருக்கள் ஏடு தொடக்க முடியாது, நாங்கள்தான் செய்வோம் என்று “புலி” ரவுடிகளோடு சென்று இந்துக்களின் அந்த நாளை கேவலப்படுத்தினால் அது என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம். துவேஷமா அல்லது தியாகமா? அல்லது இன்னமும் போர்த்துகீசர்கள்தான் தமிழர்களை ஆள்கிறார்கள் என்ற நினைப்பா?

    அல்லது அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

    கத்தோலிக்கர்கள் தங்கள் கோவிலில் ஏடு தொடக்கல் செய்வது கிடையாது. “புலி” வேஷம் போட்டவுடன் இந்துக்களின் (தமிழர்களை 90 சதவீதமானவர்கள்) தலையில் ஏறி உள்ளி அரைக்கலாம் என்று கத்தோலிக்கர்கள் எண்ணுகிறார்களா?

    அன்று இந்துக்கள் “மனிதர்”களாக இருந்தபடியால் அந்த கத்தோலிக்கர்களை உதைக்கவில்லை. இனி அப்படி ஒரு கூத்து நடந்தால் கண்டிப்பாக உதைக்க பல இந்துக்கள் தயாராக உள்ளனர்.

    Reply
  • Rohan
    Rohan

    சில பிழைப்பவாதிகள் செய்யும் திருகுதாளங்களையெல்லாம், யாழ் மையவாதமாக எப்படி இனம் காண முடியும்??, என்று கேள்வி எழுப்புகிறார் பார்த்திபன்.

    அதே பார்வையைத் தான் நானும் கொண்டிருக்கிறேன். சிவாஜி அண்ணர் தேர்தலில் நிற்பதால் வடக்கு – கிழக்கு வாதம் எழவில்லை. அவர் வல்வெட்டித்துறையான் அல்லவா? இதுவே சிவகீதா பிரபாகரனாக இருந்திருந்தால் காட்டிக் கொடுக்கும் மட்டக்களப்பார் என்று ஒரு புத்தகமே எழுதியிருப்போம்.

    அவுஸ்திரேலியாவில் சில வருடங்களின் முன் ஒருவர் கேணல் கருணாவின் அனுசரணையுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தலைவராக வந்தார். அவர் பிரதேச வாதம் பார்த்து சேறடிக்கப் படவில்லை என்று அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு, அவரும் வல்வெட்டித்துறை என்று அறிந்தேன்.

    சம்பந்தரும் துரைரத்தினசிங்கமும் பிரதேச வாதம் பேசித் தான் சிறிகாந்தாவை வீழ்த்தி வென்றார்கள் என்றும் ஒரு வதந்தி உண்டு.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இந்த நேரு குணரத்தினம்,லயோலாக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,ஒருவர் கூறினார்(அவரும் தற்போது கனடாவில்தான் இருக்கிறார்),தமிழ்நாட்டு மாணவர்களெல்லாம் ஊர்வலம் உண்ணாவிரதம் என்று சிறை போய்கொண்டிருக்கும் போது,போலீசாரிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கும்போது,இந்த நேரு குண்ரத்தினம் மட்டும் “சட்டையில் தூசு படாமல்”,”விடுதலைப் புலி என்று கூறிக்கொண்டு” சென்னையில் திரிகிறார்- அவர் தகப்பன்,உதவி செய்வது போல் நடி,ஆனால் செய்து விடாதே!,”ஜவகர்லால் நேரு பேரன் போல் இரு” என்பதாகவும்,என்றார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,கைது செய்யப்பட்டு,தூக்கு தண்டனை அடைந்துவரும் “பேரறிவாளன்” பரம்பரையாக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தத்கது.”யாழ்ப்பாணத்தில்” பரம்பரையாக வசதியானவர்கள் என்பது கிடையாது.மிஞ்சிப் போனால்,மலேஷியா சென்று ஆப்பிரிக்கா சென்று,சிந்திக்க நேரமில்லாமல்,கடுமையாக உழைத்தவர்களின் (ஒரு சில தலைமுறைக்கு முன்பு)வாரிசுகளாக இருக்கலாம்.இந்திய பணக்கார வாரிசுகள் சோம்பேரிகள் என்பதை ஒத்துக் கொள்ளலாம்.இதை யாராவது சரியாக ஆராயவேண்டும்.ஏனென்றால் விடுதலைப் புலிகளில், பணமிருப்பவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து சலுகைகள் அளிக்கப்பட்டே வந்திருக்கின்றன. இந்தியாவில் இத்தகைய மனோநிலை சர்வசாதாரணம் என்றாலும்,நான் வித்தியாசமாக பார்த்த இலங்கைதமிழரிடம் இதை கண்டது அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் திலீபன்,குமரப்பா&புலேந்திரன் சாவுகளுக்கு பின்பு,நேரு குணரத்தினத்தை மறந்துவிட்டு,என்னுடைய “வித்தியாசமான பார்வையை” மாற்றிக் கொள்ளவில்லை.அன் ஆராய்ச்சியின்?,ஒரு தெளிவை முன் வைக்க விரும்புகிறேன். அந்தப் புரட்சி ,இந்தப் புரட்சி என்றாலும், இலங்கைத்தமிழர் பிரச்சனை ஜாதி அமைப்பை விட்டு வெளிவரவில்லை.

    சென்னையில் நடந்த “ஈராஸ் மாநாட்டில்” நேரு? ஒரு வீடியோவை வெளிநாட்டு பிரதிநிதிக்களுக்கு போட்டு காண்பித்தார், அதில் ஒரு விமானம் வந்து குண்டு போடுவதை காண்பித்து,சிங்களவரின் கொடுமை என்றார்.ஆனால், அது இரண்டாம் உலகப் போரின் வீடியோவாகும். இதற்கு ஈராசும் சப்பைக் கட்டு கட்டியது. அதாவது “அரசியலின் ஏகப் பிஅதிநிதிகள்” என்று கூறிக்கொண்டு,சட்டையில் தூசு படாமல்,”பொய்ப் பிரச்சாரங்களை” உலகம் முழுவதும் அப்போதே ஆரம்பித்து விட்டனர். புலிகளின் ஆரம்ப உறுப்பினர் “பற்குணத்தின்” கூற்றுப்படி, விடுதலைப் புலிகள் என்பது, ஈராஸின், விடுதலைக்? கூட்டணியின், ஒரு இராணுவ பிரிவு மட்டுமே, அடிபடவேண்டியது, சாக வேண்டியது அவர்கள் கடமை. இது புலிகளின்? பலவீனத்தால் அங்கீகாரத்திற்கும் உள்ளானது. இது ஜாதிய அமைப்பு இல்லாமல் வேறு என்ன?.இதை “புலன்பெயர்ந்த யாழ்ப்பாண வெள்ளாலர்” அல்லது “யாழ் மையவாதம்” என்று தாக்குவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!. ஏனென்றால், இது “நோயாளியை தாக்குவதை போன்றது” .நோய்க்கான “கிருமியை” கண்டுபிடித்து தாக்க வேண்டும்!. நோய்க்கான கிருமியே “முள்ளியவாய்க்காலை ஏற்ப்படுத்தியது”,வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூக்கிக் கொண்டு அலைகிறது!.

    கத்தோலிக்கர்களை பற்றி “நந்தா” குறிப்பிட்டார். லயோலாக் கல்லூரியும் ஒரு கத்தோலிக்க நிறுவனமே!. ஜெர்மனியில், “வில்லா ஹூகல்” என்ற ஆராய்ச்சி பல்கலைக்கழக நிறுவனம்(ஐயாயிரம் வருட இந்தியக் கலை),”எஸ்ஸன்” என்ற மாநகரத்தில், 1950 களிலேயே வெளீயிட்டப்படி,”உலகின் எந்த கலாச்சார அமைப்பும்(கத்தோலிக்கர் போன்று),இந்தியாவில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி விட முடியாது.அவைகள் திரிபு பட்டு,”ஜாதி அமைப்புகளுடன் கூடிய இன்னொரு கிரிஸ்தவ மதமாக மாறி” நமக்கே புரியாமல்,நமக்கே பூதமாக வந்து நிற்கும்,என்று எழுதியிருந்தார்கள்!. ஆகவே,”சமூக நீதி போராட்டம்” என்பது,”ஏலியன் ஐடியாலஜியினால்” ஏற்ப்பட்ட அழுத்தங்களினால்,”இந்துத்துவத்திற்குள் (இந்துமதம் அல்ல)” ஏற்ப்பட்ட வெளிப்பாடு என்பதை ஒத்துக் கொண்டாலும், “இந்துத்துவத்திற்குள்ளேயே”, ஒரு “பாசிட்டிவான” “உந்து சக்தி” சமூக மாற்றங்களை விரும்பியதா?, என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும். “தமிழ் தலித்துக்கள்” என்பது, மே18 க்கு பிறகு, இலங்கையில் உருவான ஒரு “மையம்”. இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில், தலித்திய தலைவர்கள் உருவாகுவது என்பது இயல்பு, ஆனால் “தமிழ்தேசிய தலித்துக்கள்தான்” உருவாக வேண்டுமென்று அடம் பிடிப்பது, அவசியத்தின்பால் எடுபடாமல் போகலாம். இலங்கை அரசியலில், சரத் வந்தாலும்,ரணில் வந்தாலும், ராஜபக்ஷே வந்தாலும் பரவாயில்லை, ஆனால்,தமிழ்நாட்டில் மட்டும் “தமிழ்தேசிய தலித்துக்கள்” மட்டும்தான் நிலைக் கொள்ளவேண்டும்,அதுதான் “தமிழரின் தாகம்” என்ற நிலை, ஒரு வித்தியாசமான “அரசியல் வியூகத்தை” வெளிப்படுத்தினாலும், பல சிறுபிள்ளை விளையாட்டுத் தனத்தைப் போல,”இந்திய பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாக” போகலாம்!.

    Reply
  • Varathan
    Varathan

    இவ்வாண்டு நடுப்பகுதிவரை இடம்பெற்ற யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார் டேவிட் பூபாளப்பிள்ளை??

    Writer is purposely trying to manipulate or hiding the facts to convince the readers. The above wording is factually wrong. You can see the link below. The whole world know during the last stage of war LTTE fired at people who were trying to escape from Wanni. Anna Neistat who is a senior researcher with Human Rights Watch’s emergencies division clearly pointed out this fact in TVO’s flagship current affairs program during the late Feb or early march in 2009. In this programme David Poopalapilai said that deep penetration team of army who clad in LTTE type uniform killed this people. It clearly shows David acted as a mouth piece of LTTE not as critic.

    http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/index.cfm?page_id=3&action=blog&subaction=viewpost&post_id=9590&blog_id=323

    Reply