இன்று மாலை 7.00 மணியளவில் குருநாகல், வேகெர பிரதேசத்திலுள்ள பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின் வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இரும்புக் கம்பிகளால் அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
thirumal
இன்னமும் மரணதண்டனை தீர்ப்புகள் இலங்கையில் முடியவில்லை. 26ம் திகதிக்கு முன் எத்தனை தலைகள் உருளுமோ?? யார்யார் உருட்டுவாங்களோ பார்ப்போம்.