முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான, மயோன் முஸ்தபா, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இந்த ஆதரவு தொடர்பில் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அறிவித்தார்.
இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய நசீர்; அகமட்; ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.