பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்-போர் – யூ கே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்க தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அல் முகஜிறூன் என்பது உட்பட அந்த அமைப்பின் ஏனைய அனைத்துப் பெயர்களுக்கும் இந்தத்தடை பொருந்தும்.
இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் உட்துறைச் செயலர் அலன் ஜோண்சன், தடை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றான போதிலும், பயங்கரவாதத்தை சமாளிக்க அது அவசியமான ஒரு அதிகாரம் என்று அவர் விபரித்துள்ளார்.
இந்த அமைப்பின் தலைவரான அஞ்சும் சௌத்ரி தமக்கு வன்செயல்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.தமது ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பெயரின் கீழ் இயங்கமாட்டார்கள் என்றும், ஆனால், இஸ்லாத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Kusumpu
இப்போ புலிகளின் தடையை எடுத்து விட்டார்களோ?