மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், காலஞ்சென்ற அமைச்சருமான சந்திரசேகரனின் மறைவையொட்டி பாராளுமன்றத்தில் நேற்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டாரவின் தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோது சபையோரின் சார்பில் சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார்.
உரிய காலத்தில் அனுதாப பிரேரணை சபைக்கு கொண்டு வரப்படும் என்றும் சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.