2010ம் ஆண்டில் கல்வியமைச்சின் கீழ் ஏற்படும் பதவி வெற்றிடங்களை, நியமனங்கள், பதவி உயர்வுகளின் மூலம் அவ்வப்போது நிவர்த்திப்பதற்கான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக, கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட்தம்பி தெரிவித்தார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல் வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பனவற்றில் காணப்பட்ட அனைத்து வெற்றிடங்களும் தற்பொழுது நிவர்த்திக்கப்பட்டுள்ளன. இது குறித்து கல்வியமைச்சரும் தொழிற் சங்கங்களும் திருப்தியடைந்துள்ளனர்.
எதிர்வரும காலங்களில் பிரஸ்தாப சேவைகளில் வெற்றிடம் ஏற்படும் போது, அதனை உடனடியாக நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கேற்ற வகையில் உத்தியோகத்தர்களது அனைத்தும் தகவல்கள், விபரங்களும் கணனிமயப்படுத்தப்படவுள்ளன.
இம் முறையின் கீழ் சிரேஷ்ட பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இது கல்வியமைச்சின் இணையத் தளத்தில் உள்ளடக்கப்படும். ஆகையால் எவரும் எந்த நேரமும் இது குறித்த விபரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கும் எனவும் முகம்மட்தம்பி கூறினார்.