முல்லைத்தீவில் மீள்குடியேறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் கையளிப்பு

முல்லைத்தீவு கரச்சி மற்றும் மல்லாவி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு 150 சைக்கிள்களையும், முல்லைத்தீவு வலய கல்வி அலுவலக அலுவலர்களுக்கு 5 மோட்டார் சைக்கிள்களையும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

முல்லைத்தீவு கரச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது மாணவ மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் வழங்கினார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வின்போது அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு 75 சைக்கிள்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் ஆளுநர் வழங்கினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *