அம்பாறை மாவட்டத்தின் குடி நீர் வசதியில்லாத குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் 3ஆவது கட்டத்;தை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் நிதிதிட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்திற்கான செலவீன மதீப்பீட்டுத் தொகையின் 85 வீதமான 91.8 மில்லியன் டொலரை வரையறுக்கப்பட்ட அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு கடனுதவியாக வழங்குகின்றன. எஞ்சிய 15 வீதத்துக்கான 13.3 மில்லியன் அமெரிக்க டொலரை ஹட்டன் நெஷனல் வங்கி கடனாக வழங்குகிறது.