மேற்குக் கரையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்; இஸ்ரேல் கண்டனம்

மேற்குக் கரையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசலை உடைத்து சேதப்படுத் தியமைக்கெதிராக இஸ்ரேல் பிரதமர் பென் ஜெமின் நெதன்யாஹு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருமாறு பொலிஸாரைப் பணித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மேற்குக் கரையிலுள்ள பள்ளிவாசலை யூத கடும் போக்காளர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அங்கிருந்த புனித குர்ஆன் பிரதிகளையும் எரியுட்டினர்.

மேற்குக் கரையின் வட பகுதி நகரமான யாசுப் என்ற ஊரில் இச்சம்பவம் நடந்தது தொடர்ந்து இங்கு நிறுவப்பட்டு வந்த யூதக் குடியேற்றங்கள் முஸ்லிம்களின் எதிர்ப்பால் கைவிடப்படும் நிலைக்குச் சென்றது. குடியேற்றங்கள் நிறுத்தப்படவுள்ளமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே பள்ளிவாசலை யூதக் கடும் போக்காளர்கள் உடைத்தனர். இங்கு வந்த இஸ்ரேல் இராணுவத்தை நோக்கி பலஸ்தீனர்கள் கற்களை எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் ஜனாதிபதி சீமொன் பெரஸ் பாதுகாப்பு அமைச்சர் எஹுட்பராக் ஆகியோரும் இதை வன்மையாகக் கண்டித்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் புனித கொள்கைக்கெதிரான செயல் இதுவென இஸ்ரேல் ஜனாதிபதி சீமென் பெரஸ் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *