எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விமுக்தி குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமுக்தி குமாரதுங்க தற்போது இங்கிலாந்தில் மிருக வைத்தியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்லி
சொந்த வீட்டுகாரனே திண்ணையில் படுத்த கதையாக்கி விட்டாவே என்னும் மனபாரம் மகனுக்கு இருக்கதான் செய்யும்; மிருக வையித்தியர்
என்பதால் இதுகளை பெரிதாய் அலட்டிக்க மாட்டார்; அம்மாவின் வோட்டுக்களும் அதனுடன் அப்பாவின் வோட்டுக்களும் இருக்குதானே அகவே இறங்கு ராஜா இறங்கு;