வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று (3) கொழும்பில் கொண்டாடப்படுகிறது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கின்றார்.
இலங்கையில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தின வைபவமொன்றில் ஜனாதிபதி ஒருவர் கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.