மியன்மார் நாட்டின் தலைவர் இன்று இலங்கைக்கு வருகிறார்.

myanmar_president.jpgமியன்மார் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட உயரதிகாரியுமான தன் சூவி இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று,  மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் வருகை தருகின்ற தன் சூவியை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பர். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *