அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மீத் மற்றும் பிரதமரின் விசேட தூதுவர் ஜோன் மெகார்த்தி ஆகியோர் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அடங்களான குழு இன்று ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்து இந்த சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டே இக்குழு இலங்கை வருகின்றது.