யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள பாட சாலைகள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களின் கல்வி மேம்பாடு, பெளதிக, ஆளணி மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முகமாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 06, 07, 08, 09 ஆகிய திகதிகளில் யாழ். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, வேலணை, காரைநகர், எழுவைதீவு உள்ளிட்ட தீவகப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்வதற்காக செல்லவுள்ள இக் குழுவில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர்கள், வடக்கின் வசந்தம் பிரிவின் அதிகாரிகள், பிரதிக் கல்வி அமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள்.