இலங்கை பத்திரிகைப் பேரவையை மீண்டும் செயற்பட வைப்பதற்காக 4.79 மில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற பொது தொழில் முயற்சிகள் செயற்குழுவின் (சேளப்) கட்டளையின் பிரகாரம் இலங்கை பேரவை மீண்டும் செயற்படவிருக்கின்றது.
இதன் உத்தியோகத்தர்களின் சம்பளம், அலுவலகத் தளபாடக் கொள்வனவு, மற்றும் மீண்டெழும் செலவு என்பவற்றுக்காகவே இக்குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் சார்பில் ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சிருமான தினேஷ் குணவர்தன இந்த குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.