காந்தி வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியது!

011009-gandhi.jpgதென்னா பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில், மகாத்மா காந்தி தங்கியிருந்த வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு மகாத்மா காந்தி சென்றிருந்த போது,  ஜொகன்னஸ்பர்க் நகரில் ஆர்சர்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார்.

இதைää காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரும்,  கட்டடக்கலை நிபுணருமான ஹெர்மன் கெலன்பாக் என்பவர் வடிவமைத்து இருந்தார். இந்த வீட்டில் தான் இருவரும் 1908ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் தங்கியிருந்தனர்.  அந்த வீட்டின் உரிமையாளரான நான்சிபால் கேப்டவுன் நகருக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதால் காந்தி தங்கியிருந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

வரலாற்று புகழ் பெற்ற இந்த வீட்டை வாங்க காந்தியின் பேத்தி கீர்த்தி மேனன் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே இந்த வீட்டை,  பிரான்ஸ் சுற்றுலா நிறுவனமான “வொயேஜர் டூ மோண்டி’ பல கோடியே ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *